50 எளிமையான திருக்குறள்கள்.

 

" TIT யின் "  

"தமிழ் வழி கல்வி"


50 எளிமையான திருக்குறள்கள்.



திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். 

இதில் திருக்குறளில் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. 

திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. 

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் ஆகும். 

வாழ்க்கையில் நல்வழிக்கு செல்ல வேண்டும் என்றால் தினமும் ஒரு திருக்குறளை படியுங்கள். 

சரி இந்த பதிவில் படிக்கும் மாணவ மணவாய்களுக்கு பயன்படும் வகையில் 50 எளிமையான திருக்குறளை பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பயன்படுங்கள்.


1 குறள் 1:


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


2 குறள் 2:


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்


3 குறள் 4:


வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு 

யாண்டும் இடும்பை இல


4 குறள் 5:


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு


5 குறள் 12:


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉ மழை


6 குறள் 13:


விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின் றுடற்றும் பசி


7 குறள் 15:


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


8 குறள் 19:


தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனின்


9 குறள் 20:


நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு


10 குறள் 21:


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு


11 குறள் 26:


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்


12 குறள் 45:


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது


13 குறள் 50:


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்


14 குறள் 53:


இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை


15 குறள் 64:


அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்


16. குறள் 71:


அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புண்கணீர் பூசல் தரும்


17 குறள் 72:


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு


18 குறள் 74:


அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு


19 குறள் 80:


அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு


20 குறள் 87:


இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்


21 குறள் 89:


உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு


22 குறள் 90:


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து


23 குறள் 94:


துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு


24 குறள் 100:


இனிய உளவாக இன்னாத கூறல் கனி

இருப்பக் காய்கவர்ந் தற்று


25 குறள் 101:


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது


25 குறள் 102:


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது


26 குறள் 103:


பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது


27 குறள் 104:


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்


28 குறள் 105:


உதவி வரைத்தன் றுதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து


29 குறள் 108:


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று


30 குறள் 110:


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு


31 குறள் 117:


கெடுவாக வையா துலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு


32 குறள் 121:


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்


33 குறள் 127:


யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு


34 குறள் 129:


தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு


35 குறள் 131:


35 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்


36 குறள் 133:


ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்


37 குறள் 151:


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை


38 குறள் 201:


தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை யென்னுஞ் செறுக்கு


39 குறள் 202:


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்


40 குறள் 208:


தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயா தடியுறைந் தற்று


41 குறள் 232:


உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்

றீவார்மேல் நிற்கும் புகழ்


42 குறள் 236:


தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று


43 குறள் 237:


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவ தெவன்


44 குறள் 243:


அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்


45 குறள் 247:


அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்

கிவ்வுலகம் இல்லாகி யாங்கு


46 குறள் 281:


எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு


47 குறள் 291:


வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்

தீமை யிலாத சொலல்


48 குறள் 292:


பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்


49 குறள் 295:


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை


50. குறள் 299:


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு


20 எளிமையான திருக்குறள்கள் மற்றும் அதன் விளக்கங்கள்

👉 https://talents-infinite-talents.blogspot.com/2023/02/20.html



 திருக்குறள்



Share this article link with your friends and relatives if you like it.


**இந்த கட்டுரையின் இணைப்பை நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இப்படிக்கு,
ச.அ. சன்சனா.

Talents Infinite Talents. ( TIT )
“Be the change you want to see globally,”
OUR
WEBSITE: shorturl.at/dgtY5
YOUTUBE: shorturl.at/jMRZ7
EMAIL : talents.infinite.talents@gmail.com

TO JOIN US / CHAT WITH US: click the below link.
shorturl.at/CMNR1



"ஒளியாய் ஒளிர்வோம்"
" Let's Shine like a Light "

Comments